பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, November 27, 2015

Poongavanam All Issue in PDF

http://www.docstoc.com/docs/78577357/Poongavanam-01
http://www.docstoc.com/docs/78580036/Poongavanam-02
http://www.docstoc.com/docs/78581499/Poongavanam-03
http://www.docstoc.com/docs/80820045/Poongavanam-04
http://www.docstoc.com/docs/96336742/poo5
http://www.docstoc.com/docs/101353213/Poongavanam-06
http://www.docstoc.com/docs/116209548/Poongavanm---07
http://www.docstoc.com/docs/117533643/Poongavanam---8
http://www.docstoc.com/docs/136048017/Poongavanam-09
http://www.docstoc.com/docs/136052359/Poongavanam-10



http://www.docstoc.com/docs/96336742/Poongavanam-05

Sunday, August 23, 2015

21. திருமதி ஜெனீரா கைருல் அமான் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த திகதி - 2015.09.26

திருமதி ஜெனீரா கைருல் அமான் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் பிறப்பிடம், கல்லுhரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?

மகாவலியின் நன்னீரும், தோணாக் கடல் நீரும் சங்கமிக்க, மீனினங்கள் பாட்டிசைத்துப் பரவசத்திலாழ்த்த, முத்துவிளை நிலமாய் பெயரெடுத்த கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவள். ஓய்வு நிலை அதிபர; எம்.ஈ.எச்.எம். தௌபீக் - அபீபா உம்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியாவேன். ஆரம்பக்கல்வி முதல் உயர;தரம் வரை திஃகிண்ணியா முஸ்லிம் மகளிர; மகா வித்தியாலத்தில் கல்வி கற்று, இப்பாடசாலையிலேயே ஆசிரியராகக் கடமையாற்றுகிறேன். பள்ளிப்பருவத்தில் பல போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிப் பரிசுகள் பெற்றுள்ளேன்.
 
02. உங்கள் குடும்பப் பின்னனி பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனக்கு 03 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். எனது கணவர் ஓர் ஆசிரியர். என் இலக்கியப் பயணத்திற்கு மிகவும் துணையாக இருப்பவர். அதனால்தான் என்னால் தொடர;ந்து எழுத முடிகிறது. எனது உடன்  பிறப்புக்கள் 05 பேர். இரு சகோதரிகளான நிகாரா, நாதிரா பட்டதாரி ஆசிரியைகளாவர். தம்பிமார;களான இமாம் கமநல சேவைத் திணைக்களத்திலும், ஜிப்ரி தேசிய நீர் வடிகால் சபையிலும், ரில்மி கணக்காளராகவும் கடமையாற்றுகின்றார்.

03. பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டுவரும் உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர;ந்து கொள்வீர்களா?

ஆம்! ஆசிரியத் தொழில் புனிதமானது. எம்மை நாடி வரும் மாணவச் செல்வங்களுக்கு அறிவுப்பால் புகட்டுவதில் அதிக ஆர;வம் காட்டி வருகிறேன். ஏழை - பணக்காரன், படித்தவர; - பாமரர; என்ற பாகுபாடின்றி எல்லோரையும் சமனாக நோக்குகிறேன். இதனால் மாணவர;கள் என்னிடத்தில் மிக அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்கிறார;கள். நான் கற்பித்த மாணவர;களில் ஒரு மாணவன் நன்றாகவே சித்திரம் வரைவான். அவன் திறமையைப் பாராட்டினேன். ‘எங்க வீட்டில் சித்திரம் வரைந்தால் ஏச்சுத்தான் விழும்’ என்றான். உடனே அவன் தந்தையை வரவழைத்து, இம் மாணவனுக்குச் சிறந்த எதிர;காலமுண்டு. அவன் திறமையைத் தடுக்க வேண்டாம் என்றேன்.  அவன் தந்தை அதற்குச் சம்மதித்தார;. அன்றிலிருந்து பாடசாலை, மாவட்டம், மாகாணம், தேசிய ரீதியாகப் பல பரிசுகளை சித்திரப் போட்டிகளில் பெற்றான். இன்று சித்திரப் பாடத்தினால் பல்கலைக் கழகத்தில் உள்ளான். அவர;கள் என்னை மறந்துவிடவில்லை. இதுபோல் இன்னும் பல மாணவர;கள் பல்கலைக் கழகத்திலும் உள்ளனர், தொழில் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

 04. எழுத்துத் துறைக்குள் எப்போது, எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரணகர்த்தா யார்?

சிறு வயதிலிருந்து என்னிடம் வாசிப்புப் பழக்கம் உண்டு. தினகரன் சிறுவர் உலகம் பகுதியை மிக ஆவலாக வாசிப்பேன். அப்போது எனது தந்தை அவற்றுக்கு ஆக்கம் எழுதுமாறு கூறினார். எனது பொழுதுபோக்கு எனும் தலைப்பில் கட்டுரை எழுதி தினகரன் பத்திரிகைக்கு அனுப்பினேன். மறுவாரமே பிரசுரமாகியது. நுhற்றுக் கணக்கான வாசகர்கள் பாராட்டி எழுதினார்கள். வாசகர்களின் கைதட்டல்களே ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் என்பார்கள். அவர்களது ஊக்குவிப்பே என்னை எழுதத் துhண்டியது. சகோதரர் அமீர் அலி சஞ்சிகைகளை வீட்டுக்குக் கொண்டு வருவார். அவற்றுக்கு எழுதுமாறும் கூறினார். அதற்கும் எழுதினேன். பாடசாலையில் படிக்கும் போது மர்ஹும்  கலைப்பிரியன் பரீட் மௌலவி, என் கவியாற்றலைப் பார்த்து சிந்தாமணிப் பத்திரிகைக்கு எழுதுமாறு விலாசத்தை எழுதித் தந்தார். அதனைத் தொடர்ந்து அவற்றிலும் அனேகமான ஆக்கங்கள் பிரசுரமாகின. கலைவாதி சேர், நிஸ்வான் சேர், அருளானந்தம் சேர் போன்றோர் எழுதுவதற்கும், நுhல் வெளியிடுவதற்கும் ஆலோசனை வழங்குகிறார்கள். திருமணத்தின் பின்னர் எனது கணவர், இலக்கிய உலகில் நிலைத்து நிற்க ஊக்கமும், உற்சாகமும் தந்து என்னைத் தொடர்ந்து எழுதுவதற்கு ஆதரவு வழங்குகிறார்.

05. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?
         
எனது குடும்பத்தினர; அரசியலில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்தாலும், இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டுவதுண்டு. எனது பெரியப்பாமார்களான முஹம்மது அலி, மாகாத், மஹ்ருப் போன்றோர் ஆங்கிலப் பத்திரிகைகளில்  எழுதினார;கள். மற்றும் சாச்சாமார்களான மௌஜுத், பாறுக் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். வீட்டிலே நுhலகம் வைத்திருந்ததாக மூத்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் கூறுகிறார;கள். எனது தந்தை  தற்போது நேரம் கிடைக்கும்போது எழுதுகிறார;கள். நெஞ்சம் கவர;ந்த நாஸர;, சிறுவர; பாடல் போன்ற நுhல்களைப் பிரசவித்தார;. கலாபு+ஷணம், முதலமைச்சர;, சிரேஷ்ட பிரஜை முதலிய விருதுகள் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுக் கூறலாம். மர;ஹும் கவிஞர; அண்ணல், கவிஞர; கஹ்ஹார;, அமீர; அலி, கலாநிதி கே.எம். இக்பால்,  உபைதுல்லாஹ் அதிபர;, அஷ்ரபா நுhர;தீன், சுஹைதா கரீம் போன்றோர; எமது குடும்பத்தைச் சேர;ந்தவர;கள் தான்.

06. இதுவரை வெளியிட்ட நுhல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாலர; பாடல் (1991), பிரியமான சினேகிதி (சிறுகதைத் தொகுதி - 2009),  சின்னக் குயில் பாட்டு (சிறுவர் இலக்கியம் - 2009), 2010 இல் கேணிப்பித்தன் அருளானந்தம் (மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர;களின் உதவியுடன் மிதுஹாவின் நந்தவனம் (சிறுவர; கதைகள்), 3-5 மாணவர்களுக்கான ‘கட்டுரை எழுதுவோம்’ போன்ற நுhல்களை வெளியிட்டேன். முப்லிஹாவின் சிறுவர; கானங்கள் (2012), மழலையர; மாருதம் (சிறுவர் உளவியல் கட்டுரைகள் - 2013) இன்னும் பத்திரிகைகளில் பிரசுரமான கவிதை, கதைகள் ஏராளமாக உண்டு. அவற்றைப் பிரசவிப்பதற்கு இறைவனிடம் பிரார;த்திக்கிறேன்.



07. உங்கள் நுhல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

1991 ஆம் ஆண்டு அழுத்கம ஆசிரியர; பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற காலமது. சிறுவர் பாடல் நுhல் வெளியிடுவதற்காக எனதூர்  எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்களைத் தொகுத்தெடுத்து வெளியிடுவதற்கு   ஆயத்தமானேன். அன்று எமக்கு விரிவுரையாளராக இருந்த கலைவாதி கலீல் சேரிடம் இதுபற்றிக் கூறினேன். தொகுப்பாக வெளியிடாமல் சொந்தப் படைப்பாக வெளியிடுங்கள். பின்னால் மிகப் பிரயோசனமாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார். அதன்படி செயல்பட்டேன். 2012-முப்லிஹாவின் சிறுவர; கானங்கள், 2013ல், மழலையர் மாருதம் முதலிய நுhல்களையும் பிரசவித்தேன்.


08. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

ஆம்! வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். இதுவரை வெளியிட்ட நுhல்கள் என்னிடம் மிகுதி இல்லாமல் முடிந்துவிடும். 02 ஆம் பதிப்பு போடுமாறு பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இரண்டாம் பதிப்பு போடுவதைவிடப் புதிதாக நுhல் வெளியிடுவது இலகுவாகத் தெரிகிறது.

09. உங்கள் ஆசிரியப்பணி அனுபவத்தில் இன்றைய மாணவர;களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பாடசாலைகளில் பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் தமிழ் மொழித் தினம், மீலாத் போட்டிகள் என்பன முக்கியமானவை. பேச்சு, க(வி)தை, கட்டுரை, ஆக்கத்திறன் வெளிப்பாடு, வாசிப்பு என்பவற்றுக்குப் பயிற்சி கொடுத்து கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் வரை மாணவர;களைப் போட்டிகளுக்கு மாணவர;களை அனுப்புகிறோம். இதனால் மாணவர;களின்  இலக்கியப் போக்கு சிறந்து காணப்படுகின்றது. பாடசாலைகளில் நுhலகம் உள்ளதால், மாணவர;களின் வயதிற்கு, தரத்திற்கேற்ப பல புத்தகங்கள் உள்ளன. அவற்றை வாசிப்பதாலும், எழுதுவதாலும் எழுத்துத்துறையில் நாட்டமேற்படுகிறது. தரமான ஆக்கங்களைப் பத்திரிகைக்கு அனுப்பி ஊக்குவித்து வருகிறேன். பல்கலைக்கழக மாணவர;கள் எனது நூலை ஆய்விற்காக எடுத்துச் செல்கிறார;கள்.

10. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர;கள் என்று யாரும் உண்டா?

உள் (வெளி) நாட்டு எழுத்தாளர்களின் நுhல்களை வாசிக்கிறேன்.  அன்பழகன் சேர;, அருளானந்தம் சேர், ஸர்புன்னிஸா ஹஸன், கலைவாதி சேர், ஜரீனா முஸ்தபா, சுலைமா சமி போன்ற எழுத்தாளர;கள் அதிகமான நூல்களை அன்பளிப்பாகவே வழங்கியுள்ளார;கள். அவற்றை ஓய்வு நேரங்களில் வாசிக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளர;களும் வெவ்வேறு கோணத்தில் எழுதியுள்ளார;கள். எனவே அனேகமான எழுத்தாளர்களைப் பிடிக்கும்.

11. உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

லட்சுமி, அனுராதா ரமணன், பாலேஸ்வரி, ஜரீனா, சுலைமா, இன்ஷிரா போன்றோரின் நாவல்கள் அருமையானவை. அஷ்ரபா, ரிம்ஸா, ரிஸ்னா, ஸர்புன்னிஸா, ஸக்கியா, பாயிஸா, மஸூரா, றாஹிலா, பஹீமா ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை. பெண்ணியம், சீதனம், பாலியல், இயற்கை, சமூகச் சீர்கேடுகள், போர்ச் சூழல் என்பவற்றைக் கருவாக வைத்து இலக்கியம் படைக்கிறார்கள். உண்மையில் பாராட்டுக்குரியது.

12. எழுத்துத்துறை சார்ந்த உங்கனது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

கலாசார மரபுகளை மீறாமல் இலக்கியம் படைக்க வேண்டும். வாசகர; மத்தியில் நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும். பெண்கள் சுதந்திரமாக  எழுதுவதற்குக் குடும்பத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காத்திரமான படைப்புக்களை பிறமொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும். நாவல்கள் கூடுதலாக வெளிவர வேண்டும்.

13. இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுவரும் ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்களது பார;வை எப்படி இருக்கிறது?                

தொட்டிலை ஆட்டும் பெண்களின் கைகள்தான் தொல்லுலகையும் ஆள்கிறது. இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறிச் செல்கிறார;கள். இலக்கியத்துறை மட்டும் விதிவிலக்கல்ல. கணவன், பிள்ளைகள், குடும்பம், தொழில் என எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார;கள்;. வீ(நா)ட்டுப் பிரச்சினைகள், வறுமை, காதல், சிறுவர; துஷ்பிரயோகம், சீதனம், பெண்ணியம் போன்ற கருத்துக்களைப் பேனா மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார;கள். ஆயினும் பெண்கள் எனும் வரையரைக்குள்ளிருந்து விமர;சனங்களைக் கண்டு மனம் தளர;ந்துவிடுகிறார;கள். இதனால் பல பெண்கள் இலக்கியத் துறையிலிருந்து விலகிக் கொள்கிறார;கள். நன்றாக எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளர;களில் சிலர; காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார;கள். எழுதும் பெண்களைக் குடும்பமும், சமூகமும் தட்டிக் கொடுக்க வேண்டும். அவள் மேலும் எழுதுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தொடர்ந்து இலக்கியம் படைக்கும் பெண்களை வாழ்த்துகிறேன்.

14. இணையத் தளங்களில் வெளிவரும் இலக்கியப் படைப்புகள் பற்றிய உங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?
                           
இன்று பலர; இணையத்தளங்களில் இலக்கியப் படைப்புக்களை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. உள்நாடுகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இவற்றைப் பார;வையிட்டுக் கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், விமர;சனம் செய்வதற்கும் நல்லதொரு வாய்ப்பாக இது அமைகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புக்களைப் பதிவு செய்யவும், பாதுகாக்கவும் முடிகிறது. இணையத்தள வசதி உள்ளவர;களால் பயன் பெறமுடியும். இல்லாதவர;களால் என்ன செய்ய முடியும்?

15. சிறுவர் இலக்கியத்திற்காகச் சிறந்த படைப்புக்களைச் செய்து வருகிறீர்கள். இதுபற்றிக் குறிப்பிடுங்கள்..
                         
ஏனைய படைப்புகளை விட, சிறுவர; இலக்கியம் சற்று வித்தியாசமானது. சிறுவர;கள் விளங்கக்கூடிய இலகு நடையில் எழுதப்பட வேண்டும். எழுதுபவர;கள் சிறுவர்களாக மாறி, அவர;களது உள்ளத்து உணர்ச்சிகளைப் புரிந்து, அதற்கேற்பவே எழுத வேண்டும். நான் எழுதிய காலப் பகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சிறுவர் இலக்கியம் படைத்தார்கள். இப்போது அதன் வருகை அதிகரித்துள்ளமை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

16. இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க முடியாதவர் அல்லது மறக்க முடியாத ஏதாவது சம்பவம் உண்டா? அது பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்களும், மறக்க முடியாத சம்பவங்களும் அனேகமுண்டு. அவற்றில் எனது சின்னக் குயில் பாட்டு, பிரியமான சினேகிதி ஆகிய நுhல் வெளியீடுகள் பற்றி பத்திரிகையில் பிரசுரமானதைப் படித்துவிட்டு பேராதனை சர்புன்னிஸா அவர்கள் மடல் வரைந்திருந்தார்கள். உடனே அவர்களோடு தொடர்பு கொண்டேன். அன்றிலிருந்து எங்களது தொடர;பு வளர்ந்தது. அவர்களில்லம் சென்றபோது கணவனும், மனைவியும் இலக்கியத் தம்பதிகள் என்று புரிந்தது. ஹஸன் சேர் அவர்கள் சிறந்த கல்விமான், ஓராபி பாஷா பணிப்பாளர், பேச்சாளர், 14 நுhல்களை தமிழ், சிங்களத்தில் வெளியிட்ட எழுத்தாளர; முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக அறிஞர் சித்தி லெப்பை, ரி.பி. ஜாயா போன்றோருடன் கைகோர்த்தவர். பண்பான, பணிவான இலக்கியத் தம்பதிகளின் தொடர்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
 
17. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆக்கங்களின் இலக்கியத்தரம் பற்றிய தங்களது கருத்து எவ்வாறு உள்ளது?

தற்போது சிறுவர;கள், இளைஞர;கள் மூத்தோர;கள் எனப் பலரும் சஞ்சிகை, பத்திரிகைகளுக்கு எழுதி வருகின்றனர;. அவை அத்தனையும் தரமானவை என்றோ, தரமற்றவை என்றோ கூறமுடியாது. பொருத்தமற்றதாக இருப்பின் தயாரிப்பாளர;கள் அவற்றைத் தரமுள்ளதாக மாற்றியமைத்துப் பிரசுரிக்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் தரம் சிறப்பாக அமையும்.

18. தாங்களது இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீகள்?

உலகில் அநியாயம், பொய், ஊழல் ஆகியவை மறைந்து நீதி, நியாயம் உண்மை உயிர; வாழ வேண்டும். நான் மரணித்தாலும் என் இலக்கியங்கள் நிலைத்து நிற்க வேண்டும். எனது எழுத்துக்களால் யார; மனதும் புண்படக் கூடாது.

19. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

2008 ஆம் ஆண்டு கிண்ணியாப் பிரதேச சாகித்திய விழாவில் விருதும், இலக்கியத் தாரகைப் பட்டமும், திருகோணமலை நூலக அபிவிருத்தி சபை விருது, கிண்ணியா நகரசபை விருது
2010 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விருது, பொற்கிழி
2012 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய சிங்கள கவிஞர; சம்மேளனம் காவியஸ்ரீ பட்டமும்  விருது
2013 ஆம் ஆண்டு திருகோணமலை தமிழ்ச் சங்கம் சிறுகதை போட்டி 02 ஆம் பரிசு, கிண்ணியா கலை இலக்கிய மன்றம் கலைமதி விருது
2014 ஆம் ஆண்டு ஹிஸ்புள்ளாவின் நதியைப் பாடும் நந்தவனங்கள் விருது பொற்கிழி, ஒளியரசு - கட்டுரை போட்டி ஆறுதல் பரிசு, ஆசியர; பிரதீபா பிரபா விருது

20. இந்த நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

புதிய புதிய விடயங்களை தேடிக்கற்க வேண்டும். ஒருவருக்கு உயர;வு வரும் போது பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை. உபத்திரம் செய்ய நினைக்கக் கூடாது. எண்ணங்கள் நல்லதாக அமைய வேண்டும். சமூகத்துக்கு பயனுள்ள ஆக்கங்களை எழுத வேண்டும். நேர;காணல் மூலம் பல விடயங்களை பு+ங்காவனம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது பாராட்டுக்குரியது. இம்முயற்சி மேலும் உயர;ச்சி பெற வாழ்த்துகிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Wednesday, May 6, 2015

20. திருமதி தாமரைச் செல்வி அவர்களுடனான நேர்காணல்

திருமதி தாமரைச் செல்வி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் பிறந்த இடம், குடும்பச் சூழல்  பற்றிக் கூறமுடியுமா?

நான் வன்னிப் பிரதேசத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியிலுள்ள  குமரபுரம் என்ற மிகவும் சிறிய கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தின் மூத்த பெண்ணாக 1953 ஆம் ஆண்டு பிறந்தேன். எமது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது. என் தந்தை  யாழ் மாவட்டம் தென்மாராட்சியிலிருந்து நாற்பதுகளின் இறுதியில் இங்கே வந்து குடியேறியவர். பெரிய அளவில்  விவசாயம் செய்தவர். நெல்லின் வாசனையை முகர்ந்து கொண்டே எனது வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. 1974ம் ஆண்டு எனது திருமணம் நடந்தது. எனது கணவரும் இலக்கிய ஆர்வம் மிக்கவர். எழுபதுகளில் `வரணியூர் சி. கந்தசாமி' என்ற  பெயரில் வீரகேசரியில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இரண்டு பெண்களும் வைத்திய கலாநிதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது. நான்கு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.


02. உங்கள் கல்வி தொழில் அனுபவம் பற்றி?

நான் எனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டேன். அப்போது பரந்தனிலிருந்து யாழ் சென்று கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தேன். அதன் பின் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் விடுதியில் தங்கி ஆறு மாதங்கள் தையல் பயின்றேன். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக வீட்டில் தங்கிவிட்டேன். வீடும் வீட்டுப் பணிகளும் என் உலகமாகிவிட்டது.


03. உங்களது வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனக்கு சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம்  இருந்தது. படிக்கும் காலத்திலேயே எழுதும் ஆர்வமும் இருந்தது. படித்த நேரங்களில் சிறு சிறு நாடகங்கள் எழுதி நடித்தும் இருக்கிறேன். பின்னர் சிறுகதைகள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

எமது உறவினராகவோ எமக்குத் தெரிந்தவராகவோ எந்த எழுத்தாளரும் இருக்கவில்லை. அதனால் நானாகவே முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. எழுத வேண்டும் என்ற எண்ணம்  எழுந்தபோது 1973 ஆம் ஆண்டில் முதலில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதத் தொடங்கினேன். அப்போது பல நிகழ்ச்சிகளில் எனது ஆக்கங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகி வந்தன. பத்திரிகைகளுக்கும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அப்போது வீரகேசரி நிறுவனம் மாதம் ஒரு நாவல் வெளியிட்டு வந்தது. அதற்கு 'தீக்குளிப்பு' என்ற நாவலை எழுதி அனுப்பி வைத்தேன். அதைப் படித்துப் பார்த்த நிர்வாகி கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள்  என்னை நேரில் அழைத்து கதைகள் எழுதுவது பற்றி பல ஆலோசனைகளை வழங்கினார். அந்நாவல் அன்று பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எனினும் எதிர்பாராமல் கிடைத்த அவரின் வழிகாட்டல் தொடர்ந்து வந்த என் எழுத்துப் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் எப்போதும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு. அவரது ஊக்குவிப்புத்தான் ஷசுமைகள்| என்ற நாவலை எழுதி அது வீரகேசரி பிரசுரமாக 1977 ஆம் ஆண்டு வெளிவர காரணமாகியது. நான் பத்திரிகைகளுக்கு எழுதிய முதலாவது சிறுகதை 1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் பிரசுரமாகியது. அதன் பிறகு இலங்கையில் வெளிவந்த அநேக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எனது படைப்புக்கள் பிரசுரமாகின. அவற்றின் ஆசிரியர்கள் என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் என் கதைகளின் தரம் பார்த்து தமது பத்திரிகைகளில் பிரசுரித்து என்னை ஊக்குவித்தார்கள்.


04. சமகால இலக்கியங்கள்  மீதான தங்களது பார்வை எப்படி இருக்கிறது?

காலங்கள் மாறி வரலாம். காலங்களுக்கேற்ப சூழ்நிலைகளும் மாறலாம். இலக்கியங்கள் என்பது காலங்களின் கண்ணாடிதான். அந்தந்த கால நிகழ்வுகளின் பதிவுகள்தான அந்தந்த காலங்களின் இலக்கியமாகிறது. இன்றைய நிகழ்வுகளை அதாவது போர் முடிந்த பின் மக்களிடம் எஞ்சியிருக்கும் வாழ்வுகளை - வலிகளை இப்போதைய இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. மக்களின் சமகால வாழ்வு பற்றிய பதிவைச் சுமந்து பல சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் பல தரமானவையாகவும் இருக்கின்றன.
05. பல்வேறுபட்ட இலக்கியத் துறைகளில் (கவிதை, சிறுகதை. நாவல், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து) தங்களுக்கு பிடித்த துறை எது?

நான் விரும்பி ஈடுபட்டது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டு துறைகளிலும்தான். என்னைச் சுற்றி நடப்பவைகளையும் என் மனதைப் பாதித்தவைகளையும் சொல்லக் கூடிய துறைகளாக இவை இரண்டும் இருப்பதாகத்  தோன்றியது. அதனால் சம நேரத்திலேயே சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வந்தேன். தவிர ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் இருந்ததால் ஓவியமும் கற்றிருக்கிறேன். எனது கதைகளை நான் வரைந்த ஓவியங்களுடன் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகள் சுடர் சஞ்சிகை ஆகியன பிரசுரித்திருந்தன. தமிழக சஞ்சிகையான குங்குமத்திலும் எனது கதைகள், ஓவியங்கள் வந்திருக்கின்றன.


06. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கின்றீர்கள்?

எனக்குக் கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் நான் வாசிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு எழுத்து நடை, எழுத்தாற்றல் இருக்கும். வௌ;வேறு அனுபவங்களையும் பாதிப்புக்களையும் அந்த எழுத்துக்கள் எமக்குத் தரும்.


07. இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிறையப் பெண்கள் எழுதிக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாமே தவிர அவர்களின் பல படைப்புக்களின் தரம் உயர்வாகவே இருக்கிறது. அலுவலகப் பணிகள், குடும்பப் பணிகள் என்று எத்தனையோ சுமைகளின் மத்தியிலேயே இவர்களின் இலக்கியப் பங்களிப்பு இருந்து வருகிறது.


08. தற்காலப் பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் என்று எதனைக் கருதுகிறீர்கள்?

வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரங்களைத் தேடிக் கொள்வது தான் இவர்களுக்கான பெரும் சவாலாக அமைகிறது. எத்தனை பெண் எழுத்தாளர்களுக்கு குடும்பத்தவரின் ஆதரவு கிடைக்கிறது? அப்படி ஆதரவு கிடைத்தால் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்தலாம்.


09. சமூகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பெண் பற்றிய படிமங்கள் எவ்வாறு உடைக்கப்பட்டு வருகிறது?

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை, பல ஒடுக்குமுறைகளை இச்சமூகம் காலங்காலமாக பெண்கள் மீது திணித்தே வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் பெண் தனது கல்வி அறிவினாலும் தைரியத்தினாலும் ஆண்களுக்குச் சமமான அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டு உயர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் தன்னை அமர்த்திக்கொண்டு வருகையில் பெண் பற்றி சமூகம் உருவாக்கிய படிமங்கள் உடைபட்டு அவளை வேறொரு  உயர்ந்த தளத்துக்கு மாற்றம் பெற வைத்திருக்கிறது. இது ஒரு பெண் தன் அறிவாலும் ஆற்றலாலும் சாதிக்க முடிந்த சாதனை ஆகும்.


10. இலக்கியப் பணி சார்ந்த தங்களது கொள்கை என்ன?

இலக்கியம் படைப்பவர் எல்லாம் போதகர்கள் இல்லை என்று சொல்வார்கள். ஆனாலும் சமூகத்தின் நன்மை சார்ந்தே என் படைப்புக்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். போரின் தாக்கத்தால் துயரை அனுபவித்த மக்களுக்குள் ஒருத்தியாக வாழ்ந்தவள் நான். இடப் பெயர்வுகளால் ஏற்பட்ட அத்தனை இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்தவள் நான். அந்த மக்களின் துயர் வாழ்வை என் படைப்புக்கள் மூலம் வெளியுலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அது எனது கடமை என உணர்ந்திருக்கிறேன். தமிழில் வெளிவரும் சிறுகதைகள் பிறமொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதும் ஆரோக்கியமான விடயமே.

என்னுடைய ஐந்து சிறுகதைகள் சி. சிவசேகரம், ஏ.ஜே. கனகரட்ணா,  எஸ். இராஜசிங்கம். கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. மூன்று சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த விதமான மொழிபெயர்ப்புக்கள் பரந்துபட்ட வாசகர்களிடையே எங்கள் வாழ்வின் வலிகளைக் கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன்.


11. மொழி - கருத்து ஆகியவற்றில் இலக்கியத்தில் முக்கிய பங்கு பெறுவது எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?

எந்த ஒரு இலக்கியப்படைப்பிலும் கருத்துக்கும் மொழியாள்கைக்கும் முக்கிய இடம் உண்டு. நல்ல கருத்தொன்றைத் தேர்ந்தெடுத்து அதைச் சொல்ல முனையும்போது நல்ல மொழி நடை கைகொடுக்க வேண்டும். மொழியைச் சிறப்பாகக் கையாண்டால் சொல்ல வந்த கருத்தும் சிறப்புப் பெறும்.


12. உங்கள் சுய படைப்புக்களான சிறுகதைகளுக்கு கருப்பொருட்களை எங்கிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள்?

என்னைச் சுற்றியுள்ள சமூகத்திடமிருந்துதான் கதைக்கான கருக்களைப் பெற்றுக்கொள்கிறேன். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் எத்தனையோ மக்களின் பிரச்சினைகள் கதைகளின் கருக்களாக எம் மனதைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புக்களின் விளைவுகள்தான் ஒவ்வொரு படைப்புகளாகப் பதிவு செய்யப்படுகிறது.


13. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள்  பற்றிக்குறிப்பிடுங்கள். நூல் வெளியீட்டு முயற்சிகளில் வெற்றி  பெற்றிருக்கிறீர்களா?

இதுவரை எனது ஒன்பது நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது முதலாவது நாவல், சுமைகள் 1977 ஆம் ஆண்டு வீரகேசரி பிரசுரமாக வந்தது. யாழ் மீரா பிரசுரங்களாக விண்ணில் அல்ல விடிவெள்ளி நாவல் 1992 ஆம் ஆண்டிலும் வேள்வித்தீ குறுநாவல் 1994 ஆம் ஆண்டிலும் தாகம் நாவல் 1993 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுதி 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சுப்ரம் பிரசுராலய வெளியீடுகளாக 2002 ஆம் ஆண்டு அழுவதற்கு நேரமில்லை சிறுகதைத் தொகுதியும் 2004 ஆம் ஆண்டு பச்சை வயல் கனவு நாவலும் வெளிவந்தன. கொழும்பு மீரா பதிப்பக வெளியீடுகளாக 2003 ஆம் ஆண்டு வீதியெல்லாம் தோரணங்கள் நாவலும் 2005 ஆம் ஆண்டு வன்னியாச்சி சிறுகதைத் தொகுதியும் வெளிவந்தன. எமது சொந்த நிறுவனமான சுப்ரம் பிரசுராலயம் மூலமாக இரண்டு நூல்கள் வெளியிட்டோம். நூல் வெளியீட்டு முயற்சியில் வெற்றி பெறுவது என்பது  மிகவும் கடினமான விசயம். சிலரால்தான் இதில் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நூல்களை விற்பனை செய்து கொள்ளமுடியாமல் இருப்பது. புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருவது இதற்கு முக்கிய காரணமாக எனக்குத் தோன்றுகிறது. விற்பனை செய்ய முடியாவிட்டால் ஒரு படைப்பாளியால் நூல்களை வெளியிட இயலாது. இந்த சிரமங்களை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.


14. எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டிருக்கிறீர்கள்?

நான் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் முப்பத்தேழு சிறுகதைகளைத்தான் மூன்று தொகுப்பாக வெளியிட முடிந்தது. ஆரம்ப காலங்களில் எழுதிய சிறுகதைகளின் பிரதிகள் எல்லாம் போர்க்கால வாழ்வின் போது அழிந்துவிட்டன. அவைகளைத் தேடி எடுத்து தொகுத்து நூல்வடிவில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகுமோ தெரியவில்லை.


15. இலக்கியவாதிகளின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ஒவ்வொரு இலக்கியவாதியும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒவ்வொருவரினது படைப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கவும் கூடும். இல்லாமலும் இருக்கக் கூடும். அது அவர்கள் தனிப்பட்ட விசயம்.


16. இலக்கியத்தினூடாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தினூடாக நல்ல விடயங்களைக் கூறுவதன் மூலம் சமுதாயத்தில் நல்ல பலனை ஏற்படுத்தலாம் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஒரு நல்ல இலக்கை நோக்கியே சிறந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளே பரந்துபட்ட அளவில் இலக்கியங்கள் மூலம் மீண்டும் மக்களிடம் போய்ச் சேர்கின்றன. இவ் இலக்கியங்கள் சில மன மாற்றங்களையும் வாழ்வு பற்றிய புரிதல்களையும் மனிதாபிமான உணர்வின் பெறுமதிகளையும் மக்களின் மனங்களில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.


17. தற்கால இலக்கிய வளர்ச்சி எந்தளவில் உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

புதிது புதிதாய் சமூகம் தோற்றம் பெற்றுக்கொண்டு வரும்போது புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள் காணப்படுவது தவிர்க்க முடியாதது. கதை சொல்லும் முறைமையில் நவீனத்துவம் பின்பற்றப்படுகிறது. சமீப காலங்களில் வந்த படைப்புக்கள் இதனை நிரூபிக்கின்றன.


18. இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எழுத ஆர்வமுள்ளவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். இன்றைய நாளில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் காரணமாக வாசிப்பு என்பது குறைந்து விட்டது. வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களை நாம் கிரகித்துக் கொள்ளலாம். இன்றைய சமூக இலக்கிய மாற்றங்களை வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். சுற்றிலும் உள்ள மனிதர்களின் பிரச்சினைகளை மனதுக்குள் உள்வாங்கி அவற்றை நல்ல மொழிநடையில் படைப்புக்களில் பதிவு செய்ய வேண்டும்.


19. இதுவரை நீங்கள் பெற்ற பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய சிறுகதைகளில் 19 சிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கின்றன. `அவர்கள் தேவர்களின் வாரிசுகள்' குறுநாவல் 1983 ஆம் ஆண்டு கலாவல்லி சஞ்சிகை நடாத்திய போட்டியில் பரிசு பெற்றது. `வேள்வித்தீ' எனும் குறு நாவல் 1986 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. வடகிழக்கு மாகாண சபை விருது 1998 ஆம் ஆண்டு `ஒரு மழைக் கால இரவு' சிறுகதைத் தொகுப்பிற்கும் 2003 ஆம் ஆண்டு `வீதியெல்லாம் தோரணங்கள்' நாவலுக்கும் கிடைத்தது. யாழ் இலக்கியப் பேரவை பரிசு 1992 ஆம் ஆண்டு ஷவிண்ணில் அல்ல விடிவெள்ளி| நாவலுக்கும் 1993 ஆம் ஆண்டு `தாகம்' நாவலுக்கும் 2004 ஆம் ஆண்டு `பச்சை வயல் கனவு' நாவலுக்கும் கிடைத்தது. கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1993 ஆம் ஆண்டு `தாகம்' நாவலுக்கு கிடைத்தது. அரச சாகித்திய விருது 2004 ஆம் ஆண்டு `பச்சை வயல் கனவு' நாவலுக்கு கிடைத்தது. தகவம் இலக்கிய அமைப்பின் பரிசுகளையும் எனது சிறுகதைகள் பெற்றிருக்கின்றன.

விருதுகள், கௌரவிப்புக்கள் என்று பார்த்தால் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுனர் விருது பெற்றிருக்கிறேன். கிளிநொச்சி அக்கராயன் மகளிர் அமைப்பு இலக்கிய சமூகப் பணிக்காக சிறந்த பெண்மணி விருது தந்து கௌரவித்தது. கிளிநொச்சி தமிழ் சங்கம் 2002 ஆம் ஆண்டு இலக்கிய மணி பட்டமும் தங்கப் பதக்கமும் தந்து கௌரவித்தது. இலக்கியப் பணிக்கான விருதை 2003 ஆம் ஆண்டு இலங்கை கலைக் கழகமும் 2010 ஆம் ஆண்டு தமிழ் நாடு சின்னப்பாரதி அறக்கட்டளையினரும் வழங்கியிருந்தனர். 2011 ஆம் ஆண்டு கண்டாவளை கலாசார பேரவை கலை ஒளிர் விருது தந்தது. 2012 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழியல் விருது தந்தது.

என்னுடைய  `பசி' சிறுகதை தமிழ்நாடு ஜே.டி. இமயவர்மன் என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு லண்டனில் நடந்த ஷவிம்பம்| தமிழ்க் குறும்பட திரைப்பட விழா 2009 இல் பார்வையாளர் தேர்ந்தெடுத்த சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றது.


20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இந்த எழுத்துத் துறையில் இருக்கிறேன். போன வருடம் வரை சிறுகதை எழுதியிருக்கிறேன். இந்த இலக்கியப் பணி எனக்கு மன நிறைவாகவே இருக்கிறது. நான் சார்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் துன்பியல் வாழ்வை என்னால் இயன்ற வரை பதிவு செய்திருக்கிறேன். அந்த வாழ்வை மற்றவர்களின் பார்வைக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன். இலக்கியப் பதிவுகள் காலம் கடந்தும் நிற்கும் வல்லமை வாய்ந்தவை. எனது நீண்ட இலக்கியப் பணியில் எனக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் எனது பெற்றோர், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள். இவர்கள்தான் எப்போதும் என்னை எழுத வைப்பவர்கள். இவர்களால்தான் ஒரு எழுத்தாளராய் நின்று நிலைக்க என்னால் முடிந்திருக்கிறது. அதற்காக இறைவனுக்கு எனது நன்றி!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Monday, January 5, 2015

19. திருமதி ஆயிஷா இப்றாஹீம் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2015.03.15

திருமதி ஆயிஷா இப்றாஹீம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை என்பன பற்றிக் கூறுங்கள்?

மாவனல்லை நகரில் அமைந்துள்ள பசுமையான ஹிங்குலோயா எனும் கிராமத்தில் ஜனாப் முஹம்மட் ஷரீப், உம்மு றெஜீனா தம்பதியினருக்கு நான்காவது மகளாக 1942.07.02 ஆம் திகதி பிறந்தேன். ஆரம்பக் கல்வியை O/L வரையில் கற்று, அதில் சித்தியடைந்து, 1961.10.18 ஆம் திகதி ஆசிரியையாக நியமனம் பெற்று, அயல் கிராமமான கே/ தெல்கஹகொட வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையேற்றேன்.

1963 ஜனவரி 23 ஆம் திகதி ஆசிரியப் பயிற்சியை ஆரம்பித்து 1964 டிசம்பர் 31 ஆம் திகதியில் பயிற்சி முடிவடைய 1965.01.01 இல் அயலூரான கே/ கிரிங்கதெனிய பதுரியா பாடசாலைக்கு நியமனம் பெற்றேன். பின் தொடர்ந்தும் 1972.01.02 இல் கிரிங்கதெனிய அந்நூர் வித்தியாலயத்திலும், 1978 இல் கனேதன்னை முஸ்லிம் வித்தியாலயத்திலும் சேவையாற்றி அதன் பின் சொந்த கிராமமான ஹிங்குலோயா ஸாஹிரா பாடசாலையிலும் சேவை செய்து 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பாடசாலைகளில் 05 முதல் 11 வரையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டினேன். சொந்த ஊரில் பாலர் பகுதியைத் தெரிவு செய்தேன். திருப்தியான சேவை செய்தேன். பல வருடங்கள் உதவி பகுதி தலைவியாக திறம்பட செயலாற்றினேன்.

அக்காலத்தில்தான் பழைய மாணவிகள் சங்கமொன்றை உருவாக்கி 10 அங்கத்தவர்களோடு தலைவராக இருந்து பாடசாலை முன்னேற்றத்திற்காக உழைத்தேன். இன்றும் 13 வருடங்களின் பின் புதிய குழுவொன்றிடம் ஒப்படைத்துவிட்டு நானும் போஷகராக இருந்து மாணவர்களின் நலனைக் கவனித்து வருகின்றேன். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுவில் அங்கத்தவராக இருந்தபோது மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகளில் கடினமாக இருந்தேன். வெற்றியும் பெற்றேன்.

இன்றும் எனது மாணவர்கள் என்னை மிகவும் கௌரவிக்கின்றனர். அது எனக்கு பெருமிதத்தையும், மன நிம்மதியையும் தருகின்றது.

02. உங்கள் குடும்பப் பின்னனி பற்றிக் கூறுங்கள்? 

எனது உடன் பிறப்புக்கள் என்னுடன் சேர்த்து பத்துப் பேர். நான் நான்காவது பிள்ளை. மூன்று மூத்த சகோதரிகள் இளம் வயதிலே காலமாகி விட்டனர். என்னுடன் அடுத்த தங்கை ஒரு மனையியல் ஆசிரியை அவரும் ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த தங்கை O/L விஞ்ஞானப் பிரிவில் தேறியவர். அடுத்த தங்கைகள் இருவருமே O/L பரீட்சையில் தேறியவர்கள். தம்பிமார் இளமையிலே காலம் சென்றுவிட்டனர்.

நான் கிருங்கதெனியாவில் கற்பித்த காலம் 1969 ஆம் ஆண்டு எனது திருமண வாழ்க்கை ஆரம்பமானது. எனது கணவர் காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் சின்ன மரிக்கார், ஜெய்னம்பு அவர்களின் புதல்வாரன முஹம்மது இப்றாஹிம் அவர்கள். எமது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டே நடைபெற்றது. அவர் ஒரு வர்த்தகப்பாட  ஆசிரியராக பணி புரிந்து பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 1974 இல் பயிற்சியைப் பூர்த்தி செய்து பல பாடசாலைகளில் திறம்படச் சேவையாற்றினார். இருபத்தைந்து வருடங்கள் கண்டி மாவட்டத்தில் குருக்குத்தல மகா வித்தியாலயத்தில் சேவை புரிந்தார். ஊர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒருவர் என்பதை அவர் காலஞ் சென்ற பிறகே அறிந்தேன்.

எனக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் எம்.ஐ. பஸீஹா. பேராதனைப் பல்கலைக்கழக புவிவியல்துறை விரிவுரையாளர். இரண்டாவது மகள் எம்.ஐ. பரீஹா ருஷ்தி. அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவனல்லை பிரதேச சபை. மகன் எம்.ஐ. பஹ்மி வியாபாரத் தளமொன்றை நடத்துகிறார். அடுத்த மகன் எம்.ஐ. பஸ்லி சகோதரருடன் தொழில் புரிகிறார்.

எனக்கு பேரன்மார் இருவரும், பேத்திமார் நால்வரும் உள்ளனர். எனது பிள்ளைகளோடும், சகோதரிகளோடும் இணைந்து கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றேன். எனது பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடிய பங்காற்றியவர்கள் தாய் தந்தையருக்குப் பின் எனது சகோதரிகளே. இன்றும் அவர்கள் என்னையும், அவர்களை நானும் அனுசரித்தே வாழ்கின்றோம். எனது குடும்ப முன்னேற்றத்திற்கு கூடுதலான உதவிகளைப் புரிந்தவர் எனது கணவர்தான். 2000 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை முடித்து வந்து மூன்று மாதங்களுக்குள் காலமானார்.

03. பல வருடங்கள் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றுள்ளீர்கள். உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பல வருட ஆசிரிய சேவையின் போது பல வகையான குண இயல்புடைய ஆசிரிய ஆசிரியைகள், அதிபர்கள், பகுதித் தலைவர், வகை வகையான குணாதிசயங்களையுடைய மாணவர்களைச் சந்தித்தேன். ஆனால் எவ்வித சலனமுமின்றி சேவை செய்தேன். அவர்களும் துணையாகவே இருந்தனர். இன்றும் பாடசாலைக்குச் சென்று வரும் பழக்கம் எனக்குண்டு. வறிய மாணவர்களுக்கான சில தேவைகளை செய்து வருகிறேன். சேவைக் காலத்தில் 5,11,13 ஆம் ஆண்டு மாணவர்களின் பெறுபேற்றை கௌரவப்படுத்த தனவந்தர்களின் உதவியோடு பரிசில்கள் வழங்கும் முறையொன்றை ஏற்பாடு செய்து வந்தேன். இனியும் தொடர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

04. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? 

ஆரம்ப காலத்தில் கல்கி, விகடன் போன்றவற்றோடு இஸ்லாமிய புத்தகங்கள், இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் எந்தப் புத்தகங்களாயினும் சரி, கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றை வாசிப்பேன். சமூக சேவைகளுக்கு அழைக்கும் போது செல்வேன்.

05. பிறந்த ஊரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக 'பொற்கலசம்' எனும் நூலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த நூல் வெளியீடு பற்றிக் கூறுங்கள்?

பொற்கலசம் என்ற நூலை வெளியிட முதல் ஆர்வம் ஊட்டிய எனது ஆங்கில ஆசிரியரும், வித்தியாதிபதியுமான னு.ஆ.ளு. மரிக்கார் அவர்களை பெருமையுடன் நினைவுகூரிக் கொள்கிறேன். அவர்தான் பள்ளிவாசல் சம்பந்தமான தகவல்களையும் வரலாற்றையும் சொன்னவர். மூத்த மத்திசமும் கொடையாளருமான அல்ஹாஜ் எம்.எல்.எம். சமின் (மூத்த மத்திசங்களில் ஒருவர் இன்றும் சுகமாக வாழ்கிறார். அவரது நீண்ட ஆயுளுக்காக ஏக நாயனைப் பிரார்த்திக்கின்றேன்)

அடிமனதில் ஸாஹிராவைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போது, மரிக்கார் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் 1932ம் ஆண்டு பாடசாலையின் நான்காவது தலைமை ஆசிரியர் திரு. எட்வட் காலமது அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் அதில் மாணவ மாணவிகள் 11 பேரும் இருந்தனர். அந்த படத்தை அவரிடமிருந்து வாங்கி வரும்போது பாடசாலை அருகே சபுமல் இன்டஸட்ரீஸ் அல்ஹாஜ் முஸ்தபா கமால்தீன் அவர்களின் மகன் சிறுதொகை பணத்தைத் தந்து உதவி செய்தார். அப்போது புகைப்படத்தை ஸ்டூடியோவில் கொடுத்து சரிசெய்து கொண்டேன். அதன்பின் 2006 தொடக்கம் 2011 மே மாதம் வரை நண்பிகள், சகோதர ஆசிரியைகள், பழைய மாணவர்கள், ஊர்ப் பிரமுகர்கள், மூத்த தாய்மார்கள் ஆகியோரிடம் சென்று தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.

இந்நூலை எழுத ஆர்வமூட்டியதின் பங்கு 1999 இல் ஆரம்பித்து 2012 வரை இயங்கிய பழைய மாணவிகள் சங்கத்தையே சாரும். அதன் அங்கத்தவர்கள் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள், தனவந்தர்களின் பங்களிப்பும் எனக்கு பொற்கலசம் நூலை எழுத உதவியதெனலாம்.

06. பொற்கலசம் நூலை வெளியிட்ட போது நீங்கள் எதிர் கொண்ட சவால்கள் என்ன?

சவால்கள் இல்லாமல் சாதனை இல்லை. சுமுகமான முறையில் சமாளித்து புத்தகத்தை வெளியிட்டேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

07. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

ஆம். நான் எதிர்பார்த்ததைவிட பூரண வெற்றி எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது.

08. பொற்கலசம் நூல் வெளியீட்டுக்குப் பின், வேறு நூல் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடவில்லையா?

ஆர்வமுள்ளது. பொற்கலசம் நூல் போன்று இன்னொரு நூலை வெளியீடு செய்ய பல்வேறுபட்ட தகவல்களைச் சேகரிக்கிறேன். என்னால் எழுத முடியாது போனால் எழுதுவதற்கு யாரிடமாவது சேகரிக்கும் தகவல்களைக் கையளிக்கவுள்ளேன். அல்லாஹ்வின் நாட்டம் எப்படியோ அப்படியே நடக்கட்டும். அல்ஹம்துலில்லாஹ்.

இதுதவிர நான் எனது ஓய்வு நேரங்களை புத்தகங்கள் வாசிப்பதற்காகவும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிப்பதற்காகவும் பயன்படுத்துவேன். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட அருட்டுணர்வினால் அவ்வப்போது ஒரு சில ஆக்கங்களையும் எழுதியுள்ளேன். எதிர்வரும் காலங்களில் முடிந்தால் அவற்றை ஒரு நூலாக வெளியிட முயற்சி எடுப்பேன்.

09. உங்கள் பல வருட ஆசிரியப் பணி அனுபவத்தின் அடிப்படையில்; இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை பற்றி என்ன கூறப் போகிறீர்கள்?

இலக்கியத் துறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பல துறைகளிலும் கதை, கட்டுரை, கவிதைப் போட்டிகள் போன்றவற்றிலும் சிறுகதை எழுதுவதிலும் ஆர்வமுடையவர்களாக திகழ்வது போற்றக் கூடியது என்பதை உணர்கிறேன்.

10. படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?

படைப்புக்களை ஏற்றுக் கொண்டு திறந்த மனத்துடன் விமர்சிப்போரின் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

11. எதிர்காலத்தில் எத்தகைய பணிகளில், சமூக சேவைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்?

எதிர்காலத்தில் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு என்னால் இயன்ற உதவிகளை எனது ஊர் தனவந்தர்களின் உதவியோடு செய்யவுள்ளேன். எமது கிராமத்தில் பெண்களுக்கான நூல் நிலையமொன்றை யாரும் நிறுவித் தருவார்களா என்ற ஆதங்கம் என் உள்ளத்தில் நீண்டகாலமாக உள்ளது. வசதி படைத்தோரை அணுக வேண்டும் என்பதும் எனது திட்டம். தற்போதுள்ள ழு.பு.யு அதனை நிவர்த்தி செய்யுமென எதிர்பார்க்கிறேன்.

12. வளர்ந்துவரும் பெண் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்பவது என்ன?

பல துறைகளில் ஈடுபடும் பெண்கள் நம்மத்தியில் உள்ளனர். அவரவர்களின் துறையில் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஊர் வரலாறு, கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றை வெளிப்படுத்த வேண்டுமென்பது எனது ஆசை.

13. திருமணம், பெண் எழுத்தாளர்கள் பலருக்கு கைவிலங்கு போட்டுள்ளது என்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

கணவர், பிள்ளைகளைக் கவனிப்பதோடு ஏனைய நேரங்களை திட்டமிட்டுக் கொண்டால் கைவிலங்கு தானாக அவிழ்ந்துவிடும். எதற்கும் முயற்சி தேவை.

14. படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிக்கப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

படைப்பாளிகளின் ஆக்கங்கள் எவ்வளவு தூரம் சமூகத்துக்கு பயன்படுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் திறமையைக் கண்டுகொள்ளலாம்.

15. உங்கள் புத்தக வெளியீடுகளுக்கு உதவியாக அல்லது உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றிக் கூற முடியுமா?

அல்ஹாஜ் எம்.எல்.எம் சமீன், டி.எம்.எஸ். மரிக்கார் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அத்தோடு தனவந்தர்கள், அதிபர், பள்ளி பரிபாலன சபையினர், செரண்டீப் விளையாட்டுக் கழகம். புத்தக வெளியீட்டுக்கான செலவில் பாதியை தந்துதவியவர்கள் தனவந்தர்களே. அவர்களுடன் எம்.ஜே.எம். பிரிண்டர்ஸ் உரிமையாளரான எனது அன்பு மாணவன் எம்.ஜே.எம் முஸம்மில் மற்றும் மௌலவி அஸ்மி, மாணவன் அஸ்மத் ஆகியோர் கணனி வடிவமைப்பைச் சிறப்பாக செய்து தந்தனர்.

இந்நூல் வெளியீட்டின் வெற்றிக்கு உதவியவர்களில் அதிபர் ஜனாப் நிஸாருதீன், சகோதரி ஆயிஷா ஹாஷீம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புத்தக வடிவமைப்பை ஆயிஷா ஹாஷீம் அவர்கள் செய்து தந்தார்கள். புத்தகத்துக்குப் பெயர் சூட்டியது எனது உற்ற நண்பி வசீலா இப்றாஹிம் ஆசிரியை என்பதையும் மறக்க முடியாது. இவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.

16. எதிர்காலத்தில் எவ்வாறான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டுள்ளீர்கள்?

நூல்களை வெளியிட ஆசை நிறையவே இருக்கிறது. ஆனாலும் வயதும் கூடிக் கொண்டே செல்கிறது. இதன் பின்தான் சிந்தித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

17. மறக்க முடியாத சம்பவம் ஏதாவது உண்டா?

பாடசாலையில் நான் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வகுப்பு ஆசிரியையின் கவனக் குறைவால் அச்சம்பவம் ஏற்பட்டது. அதாவது எனது பெயரைக் கொண்ட இன்னும் ஒரு மாணவி எனது வகுப்பில் இருந்தார். அவரின் புள்ளிகளை எனது பெயருக்கு குறிப்பிட்டு என்னை பரீட்சையில் தவறவிட, நான் ஓடி வந்து பெற்றோரிடம் கூற, எனது தந்தை விடைத் தாள்களை ஒத்துப் பார்த்ததில் நானே சித்தியடைந்திருந்தேன். அதே நிலை நியமனக் கடித விடயத்திலும் ஏற்பட்டது. எனது நியமனக் கடிதம் அவரது வீட்டுக்கே சென்றது. அவர் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டவர் என்று எனது உறவினரான எம்.சீ.எம்.எஸ். மரிக்கார் என்பவர் தபால்காரனை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ஒப்படைக்க வைத்தார். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

18. இதுவரை பெற்ற பரிசுகள், பட்டங்கள் விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

படிக்கும் காலங்களில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். பொற்கலசம் வெளியிட்டமைக்காக பாடசாலை சார்பில் பழைய மாணவர் சங்கச் செயலாளர், பழைய மாணவிகள் சங்க இரண்டாவது அங்குராப்பணக் கூட்டம் 2011.02.24 ஆம் திகதி நடை பெற்ற போது எனக்கு விருதொன்று அளிக்கப்பட்டது.

19. இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

உங்களுக்கு எனது மனமான நன்றிகள். உங்கள் பூங்காவனத்தில் அறிவு மலர்கள் என்றென்றும் பூத்துக் குலுங்க வேண்டும். உங்களின் இச்சேவை நீண்ட காலம் தொடர வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்